Sunday, July 7, 2013

அப்பாவுக்கு உவமை உண்டோ..?

அப்பாவுக்கு உவமை உண்டோ..?


முகத்தின் பொலிவினிலே

முழு கோபம் தெறிக்கும்..!

அகத்தின் ஆழத்தே

அன்பே உறைந்திருக்கும்..!


புதுமைச்சிந்தனைகள்

புருவத்திடைப்பிறக்கும் ;

அருமைக்கவிதைகளாய்

அழகு இதழில் பிறக்கும்;


வாய்மைக்குணமிருக்கும்;

வறியவர்க்குதவிடும் நல்

தாய்மை உளமிருக்கும்;

தமிழில் அழகிருக்கும்..!


மரபு காத்து நிற்கும்

மனித குணமிருக்கும்;

உறவைப்போற்றுதலில்

உண்மை அன்பிருக்கும்


முப்பால் மொழியுரைக்கும்

முந்தி அவையத்து இருத்தி வைக்கும்

அப்பாவின் மனத்தினுக்கு

அழகுவமை எங்கிருக்கும்..?

No comments:

Post a Comment