முகம் காட்டு.. தமிழ் அகம் காட்டு!
பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்
சாரதி நீங்கள்..! சாற்றுவேன் ஒரு சொல்..!
வாகனம் ஓட்டிடும் வனிதையரே உங்கள்
தேகம் மறைத்திடும் திறம் மறந்தது ஏன்..?
கொள்ளையர் போலே முகத்தினை மூடி
செல்லுதல் அழகா..? சொல்வீர் நங்கையீர்..!
நறுமுகம் தன்னில் நாணம் துரத்தி
மதிமுகம் மறைக்கும் முகத்திரை தவிர்ப்பீர்..!
பாரதி கண்ட புதுமைப்பெண்களே –உம்
வீரத்திருமுகம் விலக்கிக்காட்டுக..
மறைப்பது மறைத்து மானம் காத்தலே..
சிறப்பது என்பதை சிந்தையில் இருத்துக..
பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்
சாரதி நீங்கள்..! சாரதி நீங்கள்..!
பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்
சாரதி நீங்கள்..! சாற்றுவேன் ஒரு சொல்..!
வாகனம் ஓட்டிடும் வனிதையரே உங்கள்
தேகம் மறைத்திடும் திறம் மறந்தது ஏன்..?
கொள்ளையர் போலே முகத்தினை மூடி
செல்லுதல் அழகா..? சொல்வீர் நங்கையீர்..!
நறுமுகம் தன்னில் நாணம் துரத்தி
மதிமுகம் மறைக்கும் முகத்திரை தவிர்ப்பீர்..!
பாரதி கண்ட புதுமைப்பெண்களே –உம்
வீரத்திருமுகம் விலக்கிக்காட்டுக..
மறைப்பது மறைத்து மானம் காத்தலே..
சிறப்பது என்பதை சிந்தையில் இருத்துக..
பாரதம் என்பது பண்பாட்டு உறைவிடம்
சாரதி நீங்கள்..! சாரதி நீங்கள்..!
No comments:
Post a Comment