Sunday, July 7, 2013

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ..!

பிறப்பிலே உயர்வென்ன தாழ்வென்ன வந்திடும்


பேதையாய் வாழ்தல் நன்றோ..?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றகுறள்

பெருமொழி மறந்தோம் இன்று..!



இறப்பினும் புகழுடன் இருப்பதே நன்னெறி

என்னாளும் எண்ணி வாழ்வோம்..!

எரிப்பதோ தணலிடை ; கிடப்பதோ மண்ணிடை

இதனுள்ளே என்ன பேதம்..?



சிறப்புறு வாழ்க்கையை செவ்வனே நடத்திடச்

செய்வதே கடமையாகும்

சிந்தனை தெளிவாக்கி செயல்களில் பொலிவூட்டி

சீலமாய் வாழ்வோம் நன்றாய்..!

No comments:

Post a Comment