பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ..!
பிறப்பிலே உயர்வென்ன தாழ்வென்ன வந்திடும்
பேதையாய் வாழ்தல் நன்றோ..?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றகுறள்
பெருமொழி மறந்தோம் இன்று..!
இறப்பினும் புகழுடன் இருப்பதே நன்னெறி
என்னாளும் எண்ணி வாழ்வோம்..!
எரிப்பதோ தணலிடை ; கிடப்பதோ மண்ணிடை
இதனுள்ளே என்ன பேதம்..?
சிறப்புறு வாழ்க்கையை செவ்வனே நடத்திடச்
செய்வதே கடமையாகும்
சிந்தனை தெளிவாக்கி செயல்களில் பொலிவூட்டி
சீலமாய் வாழ்வோம் நன்றாய்..!
No comments:
Post a Comment