Sunday, July 7, 2013

நன்னெறி....!

நன்னெறி....!


ஊடகத்தே காதலினை உள்ளுணர்வு மேலிடவே

பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்- நல்ல

பண்பாட்டுப் புதுமை இதுவென்பார்..!



வீடகத்தே தம்மக்கள் விரும்பிடும் நல் காதலினை

வெறுப்போடு காறி உமிழ்வார்- வேரில்

வென்னீரை ஊற்றி அழிப்பார்..!



பாடுபட்டுக் காதலித்தும் பயனில்லை என்பவரே

பயனுறவொரு வழி சொல்லுவேன்- நல்ல

பாதையிலே நெறி செய்குவேன்..!



காதலினால் பெற்றோர்க்கு கவலைகளே பெருகுவதால்

கண்ணியமே. உன் கடமையாகும்- அன்றேல்

காதல் பயிர் களையால் சாகும்..!


படிக்கின்ற காலத்தே பாடத்தில் கவனத்தை

பழுதின்றி நிறைத்திடுங்கள் – காதல்

பாடத்தைத் தவிர்த்திடுங்கள்



வேலைக்குச்சென்றிடும் வேளையில் காதலில்

வேதனை ஏதுமில்லை-பருவம்

விளைந்திடும் காதல் பயிராய்..!



பெற்றவர் சம்மதம் காதலில் உன்னதம்

பெரும்பேறு பெற்று வாழ்வீர்..-காதல்

பிழையின்றி வாழும் நன்றாய்..!

No comments:

Post a Comment