நன்னெறி....!
ஊடகத்தே காதலினை உள்ளுணர்வு மேலிடவே
பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்- நல்ல
பண்பாட்டுப் புதுமை இதுவென்பார்..!
வீடகத்தே தம்மக்கள் விரும்பிடும் நல் காதலினை
வெறுப்போடு காறி உமிழ்வார்- வேரில்
வென்னீரை ஊற்றி அழிப்பார்..!
பாடுபட்டுக் காதலித்தும் பயனில்லை என்பவரே
பயனுறவொரு வழி சொல்லுவேன்- நல்ல
பாதையிலே நெறி செய்குவேன்..!
காதலினால் பெற்றோர்க்கு கவலைகளே பெருகுவதால்
கண்ணியமே. உன் கடமையாகும்- அன்றேல்
காதல் பயிர் களையால் சாகும்..!
படிக்கின்ற காலத்தே பாடத்தில் கவனத்தை
பழுதின்றி நிறைத்திடுங்கள் – காதல்
பாடத்தைத் தவிர்த்திடுங்கள்
வேலைக்குச்சென்றிடும் வேளையில் காதலில்
வேதனை ஏதுமில்லை-பருவம்
விளைந்திடும் காதல் பயிராய்..!
பெற்றவர் சம்மதம் காதலில் உன்னதம்
பெரும்பேறு பெற்று வாழ்வீர்..-காதல்
பிழையின்றி வாழும் நன்றாய்..!
ஊடகத்தே காதலினை உள்ளுணர்வு மேலிடவே
பாராட்டி வாழ்த்தி மகிழ்வார்- நல்ல
பண்பாட்டுப் புதுமை இதுவென்பார்..!
வீடகத்தே தம்மக்கள் விரும்பிடும் நல் காதலினை
வெறுப்போடு காறி உமிழ்வார்- வேரில்
வென்னீரை ஊற்றி அழிப்பார்..!
பாடுபட்டுக் காதலித்தும் பயனில்லை என்பவரே
பயனுறவொரு வழி சொல்லுவேன்- நல்ல
பாதையிலே நெறி செய்குவேன்..!
காதலினால் பெற்றோர்க்கு கவலைகளே பெருகுவதால்
கண்ணியமே. உன் கடமையாகும்- அன்றேல்
காதல் பயிர் களையால் சாகும்..!
படிக்கின்ற காலத்தே பாடத்தில் கவனத்தை
பழுதின்றி நிறைத்திடுங்கள் – காதல்
பாடத்தைத் தவிர்த்திடுங்கள்
வேலைக்குச்சென்றிடும் வேளையில் காதலில்
வேதனை ஏதுமில்லை-பருவம்
விளைந்திடும் காதல் பயிராய்..!
பெற்றவர் சம்மதம் காதலில் உன்னதம்
பெரும்பேறு பெற்று வாழ்வீர்..-காதல்
பிழையின்றி வாழும் நன்றாய்..!
No comments:
Post a Comment