Sunday, May 2, 2010

இன்று புதிதாய்ப்பிறந்தோம்...!

இன்று புதிதாய்ப்பிறந்தோம்...!
வாழ்த்துக்கிடைத்தது..வந்ததும் மனது
பூத்துக்குலுங்கிடும் பூமரம் ஆனது...!

என்றும் என்னிடம் இலங்கி நின்றிடும்
தென்றல் மனது திளைத்துத் திரிந்தது...!
கனாக்கள் கண்டு களித்திடும் மனதினில்
வினாக்கள் கொஞ்சம் விரவி நின்றன
யாருக்காக இப்பூமியில் பிறந்தோம்
பாருக்கு என்ன பெருமைகள் என்னால்..?
என்று நினைத்து நின்ற வேளையில் ...உன்
வாழ்த்துக்கிடைத்தது..வந்ததும் மனது
பூத்துக்குலுங்கிடும் பூமரம் ஆனது...!


சித்திரை முதல் நாள் ... விக்ருதி ஆண்டு