Sunday, April 24, 2011

சரணமே சரணம் சாயி..!
*-------------------------*

கண்களில் கருணை தேக்கி
கடவுளின் வடிவமாகி
எங்களின் கவலை போக்கி
இதயத்தில் வாழும் தேவே..!

மருத்துவம் கல்வி ஈந்தாய்..!
மக்களுக்கென்றும் நீ ..தாய்..!
இருத்துவம் உம்மை எங்கள்
இதயத்தில் சாயி நாதா!

அன்பொன்றே கடவுள் என்றாய்
அன்பினால் துயர் துடைக்கும்
பண்பினால் தெய்வம் ஆனாய்..!
பாதங்கள் பணிந்தோம் சாயி !

சிந்தையில் உம்மை வைத்தோம்
சிரமங்கள் எமக்கு ஏது
சந்திர சூரியர்க்கு
சகத்திலே மறைவு ஏது..?

சத்தியம் பொய்ப்பதில்லை
சரித்திரம் மறைவதில்லை
சத்திய சாயி பாதம்
சரணமே சரணம் சாயி..!


சொ ச.அருள் நம்பி
24/04/2011