Monday, October 22, 2012

கவிதையல்ல.... ஆக்கிக்கொள்ளலாம்..!


தள்ளாடும் போதையிலும் தரணிமக்கள் மனம் மகிழப்


பண்பாடு மாறாமல் பண் பாடும் மேதையிவன்

துள்ளியோடும் காவிரிபோல் தூய மனத்திண்ணனிவன்

சொல்லாடும் கவி நயத்தைக் காணாதார் மனிதர் இலர்

பள்ளிகொண்ட பரமனுக்குத்தாசனிவன் என்றாலும்

வெள்ளிமலை ஈசன் பால் மாறாத அன்புடையோன்

காருண்ட மேகம்போல் கவிமழையைப் பொழிந்திடுவான்

சீருண்டு இவன் பாட்டில் சிரமமில்லை படிப்பதற்கு.

சருகான மலர் மீண்டும் மலராது என்பார்கள்

சிலையான தெய்வங்கள் பேசாது என்பார்கள்

சருகான மலரும் மலரும்; சிலையான தெய்வங்கள் பேசும்

என் கவித்தலைவன் கண்ணதாசன் கவிதை முன்னால்..!


என் முதல் கவிதை

முக்கண்ணன் மகனை மூஞ்சூறு வாகனனை

திக்கெட்டும் திகழும் சிதம்பர விநாயகனை

ஐங்கரனை ஆறுமுகன் அண்ணனை

மனங்கொண்டு துதித்தால் மறைந்திடும் இடரே..!

1981 ஆம் ஆண்டு ஆவணி மாதம் எழுதப்பட்ட என் முதல் கவிதை. “மனங்கொண்டு நிந்தித்தால்” என்று என்னால் தவறுதலாக எழுதப்பட்டுப்பின் அம்மாவால் “மனங்கொண்டு துதித்தால்” என்று திருத்தப்பட்டது.

கவிதையல்ல.... ஆக்கிக்கொள்ளலாம்..!

No comments:

Post a Comment