Monday, October 22, 2012

பிறந்த நாள் இன்று

பிறப்பது ஒருமுறை; பிறந்தபின் பிறிதுநாள்


இறப்பது ஒருமுறை; இதன்இடை தினம்தினம்

பிறப்பதும் இறப்பதும் அவரவர் மனப்படி;

மறப்பதும் நினைப்பதும் மனிதரின் செயல்வழி;

வெறுப்பதும் விருப்பமும் சமம் என நினைத்து,

சிறப்புறு எண்ணங்கள் சிந்தையில் செதுக்கி

இருப்பதை வளர்த்திட எண்ணங்கள் நிறைத்து

நடப்பதே நல்லது இந்த நாற்பத்தி ஆறில்..!



பிறந்த நாள் இன்று எனக்குப்

பேரன்போடு நன்று...



வாழ்த்தினீர்.. உங்கள் அன்புள்ளம் வாழ்க..!

வாழ்த்துவீர் ஆகையால் வளமுடன் வாழ்க..!

வாழ்த்திட மறந்திடு வீரே ஆயினும்

வாழ்க ..! வாழ்க..! இவ்வையகம் போற்றவே..!

-சொ. ச. அருள் நம்பி

ஐப்பசி 7

No comments:

Post a Comment